நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு
Feb 17 2020 4:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும், வரும் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிர்பயா பாலியல் வழக்கின் குற்றவாளிகளை கடந்த 22-ம் தேதி தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பின்னர் கடந்த ஒன்றாம் தேதிக்கு தண்டனை தேதி மாற்றப்பட்டது. ஆனால், கருணை மனு, குறைதீர்ப்பு மனு உள்ளிட்ட சட்ட வாய்ப்புகளால், கடந்த ஒன்றாம் தேதி நிறைவேற்றப்பட வேண்டிய தண்டனையை பாட்டியாலா நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில், குற்றவாளிகளுக்கான சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதால், தண்டனையை நிறைவேற்ற புதிய தேதி அறிவிக்கக்கோரி, மத்திய அரசு மற்றும் திஹார் சிறை நிர்வாகம் சார்பாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றவாளிகள் 4 பேரையும், வரும் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.