மேற்குவங்கத்தில் பொதுத்தேர்வுகள் முடியும் வரை ஒலிப்பெருக்கிக்குத் தடை : மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
Feb 17 2020 2:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்குவங்கத்தில், பொதுத்தேர்வுகளை முன்னிட்டு, ஒலிப்பெருக்கிகளுக்குத் தடை விதிக்க, அம்மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உயர்நிலை வகுப்புகளுக்கான தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. மேல்நிலை வகுப்புத் தேர்வுகள் அடுத்த மாதம் 12-ம் தேதி தொடங்குகின்றன. இரண்டு தேர்வுகளும், வரும் மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு, மேற்கு வங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஒலிப்பெருக்கிகளுக்குத் தடை விதித்துள்ளது.