முதலமைச்சர் அலுவலகத்தில் பொறுப்புகளை ஏற்றார் அரவிந்த் கெஜ்ரிவால் - தலைமை செயலகத்தில் அலுவல் பணிகளை தொடங்கினார்
Feb 17 2020 1:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி முதலமைச்சராக 3-ம் முறையாக பதவியேற்ற திரு. அரவிந்த் கெஜ்ரிவால், இன்று தலைமை செயலக அலுவலகத்தில் பொறுப்புகளை ஏற்றார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. டெல்லி முதலமைச்சராக திரு. அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ராம்லிலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் உரையாற்றிய திரு. கெஜ்ரிவால், டெல்லியின் வளர்ச்சிக்காக பிரதமர் திரு. நரேந்திர மோதியின் உதவியை எதிர்ப்பார்ப்பதாக கூறினார். இந்நிலையில், டெல்லி தலைமை செயலகத்தில் இன்று பொறுப்புகளை ஏற்ற திரு. கெஜ்ரிவால், தனது அலுவல் பணிகளையும் தொடங்கினார்.