ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Feb 17 2020 1:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக பெண் வழக்கறிஞர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உயர்பதவியில் பெண்களை நியமக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, குடும்பப் பராமரிப்பில் பெண்களின் பங்கு மிகவும் பெரியது என்றும், ராணுவத்தில் அவர்களுக்கு ஆபத்து அதிகமாகவே உள்ளதாகவும், பெண்களை தளபதிகளாக ஏற்றுக் கொள்ள மனதளவில் இன்னும் தயாராகவில்லை என்றும் தெரிவித்தது.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்றும், பெண் அதிகாரிகளுக்கு கமாண்டர் பொறுப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தது. 14 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பெண் அதிகாரிகளுக்கு உயர் பதவி வழங்கவும், ராணுவத்தில் பெண்களை நியமிப்பதற்கான ஆணைய உத்தரவை நிரந்தரமாக்கவும் உத்தரவிட்டது. ராணுவத்தில் பெண்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்க மறுக்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது.