நிர்பயா வழக்கில் குற்றவாளி பவனின் தந்தை தாக்கல் செய்த மறுஆய்வு மனு - மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்
Jan 27 2020 6:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிர்பயா வழக்கில், குற்றவாளி பவனின் தந்தை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை, டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நிர்பயா பாலியல் வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவன் சிறையில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மற்றொருவன், சிறுவன் என்ற அடிப்படையில், சிறை தண்டனைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டான். மீதமுள்ள 4 பேருக்கும் வரும் ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இதனிடையே, நிர்பயா வழக்கு சாட்சிகளில் சந்தேகம் உள்ளதாக, குற்றவாளி பவனின் தந்தை டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நிர்பயாவுடன் பேருந்தில் பயணம் செய்த அவரது நண்பர் அளித்த சாட்சியங்களில் சந்தேகம் உள்ளதாகவும், போலீசாரின் வற்புறுத்தல் படியே, சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், குற்றவாளி பவனின் தந்தை தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.