மங்களூரு விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு : ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வெடிக்க வைப்பு
Jan 20 2020 8:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநிலம், மங்களூரு விமான நிலையத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டை, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அதிகாரிகள் வெடிக்கச் செய்தனர். மங்களூரு விமான நிலையத்தில், நீண்ட நேரமாக கேட்பாரன்றி ஒரு மர்மப் பை இருந்தது. அதை பரிசோதனை செய்த அதிகாரிகள், வெடிகுண்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த வெடி குண்டை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், அதிகாரிகள் வெடிக்கச் செய்தனர்.