நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் தந்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது - நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி கருத்து
Jan 20 2020 8:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூக்கு தண்டனையை தாமதப்படுத்துவதற்கான குற்றவாளிகளின் தந்திரத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளதாக, நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி தெரிவித்துள்ளார்.
நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தாவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, நால்வரையும் தூக்கிலிட்ட பிறகே தனக்கு நிம்மதி என தெரிவித்துள்ளார். ஒருவர் பின் ஒருவராக மேல்முறையீடு செய்து, தண்டனையை தாமதப்படுத்துவதற்கு குற்றவாளிகள் மேற்கொண்டுள்ள யுக்தியை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும், சட்டத்துடன் விளையாடினால் என்ன நடக்கும் என்பதை புரிய வைக்க அவர்களின் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனவும் திருமதி.ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.