எதிரிகளின் சவால்களை எதிர்கொள்ள அனைத்து படைகளும் தயார் : முப்படை தளபதி பிபின் ராவத் உரை
Jan 20 2020 8:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எதிரிகளின் சவால்களை எதிர்கொள்ள, அனைத்து படைகளும் தயார் நிலையில் உள்ளதாக முப்படை தளபதி திரு. பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
நவீனமயமாக்கப்பட்ட தஞ்சை விமானப்படைத்தளம் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதன்மூலம், பாதுகாப்புத்துறையில் தஞ்சை மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட சுகோய் 30 ரக போர் விமானங்கள் நிறுத்தப்படும் அளவுக்கு தரம் உயர்த்தப்பட்ட தஞ்சை விமானப்படை தளத்தை முப்படை தலைமை தளபதி திரு. பிபின் ராவத் நாட்டுக்கு அர்ப்பணித்தார். விமானப்படை தளத்தில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் மெய்சிலிர்க்கும் சாகசங்கள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. பிபின் ராவத், இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்படும் ஆபத்தை முறியடிக்க தஞ்சாவூர் விமானப்படை தளம் மிக முக்கிய பங்காற்றும் எனக் கூறினார். மத்திய அரசு உத்தரவிடும் எந்த பணியையும் முப்படைகளும் மேற்கொள்ளும் என்றும், எதிரிகளின் எந்த சவாலையும் எதிர்கொள்ள, முப்படைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.