டெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி வேட்புமனுத்தாக்கல் செய்யச் சென்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுப்பு - தாமதமாக வந்ததாகக்கூறி அதிகாரிகள் நடவடிக்கை
Jan 20 2020 8:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி வேட்புமனுத்தாக்கல் செய்யச் சென்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான நேரம் முடிந்ததால் திரும்பிச் சென்றார்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது. முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்வதற்காக ஆம்ஆத்மி தொண்டர்களுடன் பேரணியாக சென்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்ததால். அவர் தாமதமாக வந்ததாகக்கூறி, அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனைத் தொடர்ந்து, நாளை வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளதாக திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.