கேரள மசூதியில், இந்து மத முறைப்படி நடைபெற்ற திருமணம் - ஏராளமானோர் நேரில் வருகை தந்து மணமக்களுக்கு வாழ்த்து : ட்விட்டரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதலமைச்சர் பினராயி விஜயன்
Jan 20 2020 2:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மசூதியில், இந்து மத சடங்குகளுடன் நடைபெற்ற திருமணத்திற்கு ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் அமைந்துள்ள ஜமாத் மசூதியில், ஆஷா-சரத் என்ற மணமக்களுக்கு இந்து மத முறைப்படி திருமணம் நடந்தது. மணமகள் ஆஷாவின் தாயார் ஜமாத் கமிட்டியிடம் வைத்த வேண்டுகோளின்படி, இத்திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. வழக்கமாக இந்துக்கள் திருமணத்தின்போது அளிக்கப்படும் நகைகள், ரொக்கம் போன்றவை திருமணத்தின்போது வழங்கப்பட்டன. அறுசுவையுடன் சைவ உணவு பரிமாறப்பட்டது. மத நல்லிணக்கத்தைப் போற்றும் விதமாக நடத்தப்பட்ட இந்த திருமணத்திற்கு கேரள முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருமண புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்திலும் அவர் வெளியிட்டுள்ளார்.