கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். விருப்பங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம்: முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி
Jan 20 2020 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விருப்பங்களை கேரளாவில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், நாட்டின் அனைத்து சட்டங்களும் அரசியலமைப்பின் படி இருக்க வேண்டும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அரசியலமைப்பு தொடர்பான விவகாரங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விருப்பங்களையும் கற்பனைகளையும் நிறைவேற்ற மாட்டோம் என கூறினார். மேலும், கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.