ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனை தொடர்பான அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகும் என தகவல்
Jan 18 2020 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனை தொடர்பான அறிவிப்பு, அடுத்த சில தினங்களில் வெளியாகும் என தகவல் வெளியாகிவுள்ளது. பொதுத்துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனத்தில், மத்திய அரசு, 76 சதவீத பங்கு மூலதனத்தை வைத்துள்ளது. இதனை முழுவதுமாக விற்பனை செய்ய, உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தலைமையில் அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்யவும், மத்திய அரசின் பங்கு விற்பனை தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு, அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் வெளியாகும் என தகவல் வெளியாகிவுள்ளது.