நிர்பயா வழக்கில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் : மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Jan 18 2020 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில், யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று, டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லியில், மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கு, வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவர் தாக்கல் செய்த கருணை மனுவால், தண்டனை நிறைவேற்றப்படுவது, அடுத்த மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த மத்திய அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தாமதமாவதற்கு, ஆம் ஆ‌த்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசே காரணம் என்று குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான திரு. அரவிந்த் கெஜ்ரிவால், நிர்பயா வழக்கில், யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்படுவதை உறுதி செய்ய, மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கெஜ்ரிவால் வலியுறுதித்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00