உன்னாவ் வழக்கின் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு : சி.பி.ஐ. பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
Jan 17 2020 7:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து, பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் தொடர்ந்த வழக்கில், சி.பி.ஐ. பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரிமாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 20-ம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, டெல்லி நீதிமன்றத்தில் செங்கார், இரு தினங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்திருந்தார்.