மத்திய அமைச்சராக இருந்தபோது என்.ஆர்.சி.க்கு ஆதரவளித்த ப.சிதம்பரம் : பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சித்தார்த்நாத் சிங் குற்றச்சாட்டு
Jan 17 2020 7:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அமைச்சராக இருந்தபோது தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு ஆதரவாக பேசிய திரு.ப.சிதம்பரம், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக, பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் திரு.சித்தார்த்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கான ஆதரவு பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த பா.ஜ.க. செய்தித்தொடர்பாளரும், உத்தரப்பிரதேச மாநில அமைச்சருமான திரு.சித்தார்த்நாத் சிங், சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை காங்கிரஸ் கட்சிதான் முன்னெடுத்ததாகவும், மத்திய அமைச்சராக இருந்தபோது தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஆதரித்த திரு.ப.சிதம்பரம், தற்போது மாற்றிப் பேசுவதாகவும் தெரிவித்தார்.