தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை தொடங்கக்கூடாது : கேரள மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
Jan 17 2020 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை சட்டத்தை செயல்படுத்தும் முதல் நடவடிக்கையாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை கேரள மாநிலத்தில் எந்த மாவட்ட ஆட்சியரும் தொடங்க கூடாது என அம்மாநில அரசின் முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கேரள மாநில அரசின் முதன்மை செயலாளர் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தேசிய மக்கள் தொகை பதிவு தொடர்பான எந்த நடவடிக்கையையும் தொடங்கக்கூடாது என்றும், மீறி செயல்படும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.