குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த சதி - ஜெய்ஷ் இ மொகமது தீவிரவாதிகள் 5 பேர் காஷ்மீரில் கைது

Jan 17 2020 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த முற்பட்ட ஜெய்ஷ் இ மொகமது இயக்கத்தை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் காஷ்மீரில் கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 பிரிவு நீக்கப்பட்டு பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டில் அம்மாநிலம் இருந்து வருகின்றது. இந்நிலையில், காஷ்மீரின் ஹஸ்ரத்பால் பகுதியில் உள்ளூர் போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் பதுங்கி இருந்ததாக 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, 5 பேரும் ஹசரத்பால் பகுதியைச் சேர்ந்த அஜிஸ் அகமது ஷேக், உமர் ஹமீத், இம்தியாஸ் அகமது, ஷாகீல் பரூக், நசீர் அகமது என்றும், ஜெய்ஷ் இ மொகமது பயங்கரவாதிகள் எனவும் போலீசார் தெரிவித்தனர். இந்த 5 பேரும், குடியரசு தினத்தன்று பயங்கர தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.

தீவிரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிபொருட்கள், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், சாட்டிலைட் போன்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன எனவும் போலீசார் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00