மேற்கு வங்கத்தில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கியதில் 2 பெண்கள் பலி - உடல் நிலை பாதிக்கப்பட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி

Aug 27 2014 2:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்கு வங்க மாநிலத்தில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கியதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 30 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அசன்சால் என்ற பகுதியில் உள்ள தொழிற்சாலை பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலையிலிருந்து நேற்று விஷவாயு வெளியேறி சுற்றுப்புறப் பகுதிகளுக்கு பரவியது. இந்த விஷ வாயுவை சுவாசித்த இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தெரிய வந்ததும், தீயணைப்பு வீரர்களுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விஷவாயு தாக்கியதில் தீயணைப்புப் படை வீரர்களில் நான்கு பேர் மயக்கமடைந்தனர். விஷவாயு எத்தகையது என்றும், விஷவாயு எவ்வாறு வெளியேறியது என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00