உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில் மே 12-ம் தேதி மக்களவைக்கான இறுதிகட்ட தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Apr 18 2014 11:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களவைத் தேர்தலின் இறுதிகட்டமாக 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில் மே 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 18 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 17 தொகுதிகள், பீகாரில் 6 தொகுதிகள் ஆகியவற்றுக்கு இறுதிகட்டமாக மே 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இத்தொகுதிகளில் பணியாற்றும் மாவட்ட அதிகாரிகளை இடம் மாற்றம் செய்யும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த இறுதிக்கட்ட தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நரேந்திரமோதி, ஆம்ஆத்மி கட்சி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் வாரணாசி தொகுதியும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் போட்டியிடும் ஆசம்கர் தொகுதியும் இடம்பெற்றுள்ளன.