வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த உத்தரப் பிரதேசத்தை வாட்டி வதைக்கிறது கடும் வெயில் : தாங்க முடியாத வெப்பத்தினால் பொதுமக்கள் அவதி
Aug 28 2014 2:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப் பிரதேசத்தில் வழக்கத்திற்கு மாறாக, கடுமையாக வெப்பம் வாட்டிவதைப்பதால் அம்மாநில மக்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் அண்மையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, அம்மாநிலத்தில கடுமையாக வெப்பம் நிலவுகிறது. பகல் நேர வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளது. சாலைகளில் அனல் காற்று வீசுவதால், பலரும் முகத்தை துணியால் மூடியபடி செல்கின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் இந்த அளவுக்கு வெப்பம் வாட்டியெடுப்பது, வழக்கத்திற்கு மாறானது என்று கான்பூர் நகர மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த சில நாட்களுக்கும் இதே அளவுக்கு கடுமையான வெப்பம் நீடிக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.