உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் 16 பேர் பலி - 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
Sep 23 2014 2:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் 16 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Mathura மாவட்டத்திலிருந்து 24 கட்டுமானத் தொழிலாளர்களுடன் ராஜஸ்தானுக்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த வேன் ஒன்று, Kosi Kalan என்ற இடத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், 12 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், Bulandshahr மாவட்டத்தில், பயணிகள் பேருந்து ஒன்றில் திடீரென எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் பேருந்து தீப்பிடித்துக் கொண்டது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.