காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் போராட்டம் - போலீசார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம்
Jul 29 2014 3:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. சொபோர் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து, அங்கு வன்முறை வெடித்தது.
காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து, ஜம்மு-காஷ்மீரில் பாரமுல்லா, அனந்த்னாக் மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டம், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. ஸ்ரீநகரில் ஹைடர்போரா மற்றும் மாவுலானா நகரில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதேபோல், சொபோர், சோபியான் நகரங்களிலும் போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். வன்முறையாளர்களை கலைக்க, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை போலீசார் பயன்படுத்தியதால், அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.