சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தி.மு.க. தலையீடு இருந்ததா? - மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தல்
Jul 22 2014 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு.மார்கண்டேய கட்ஜு தெரிவித்த கருத்துகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது. மேலும், நீதிபதிகளின் நியமனத்தில் தி.மு.க. தலையீடு இருந்ததாகவும் அ.இ.அ.தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில், நாடாளுமன்ற அ.இ.அ.தி.மு.க. குழுத் தலைவர் டாக்டர் மு.தம்பிதுரை பங்கேற்றுப் பேசினார். அப்போது, நீதிமன்ற செயல்பாடுகளில் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் தலையீடு அதிக அளவில் இருந்தது பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி திரு.மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். இதுகுறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என டாக்டர் மு.தம்பிதுரை வலியுறுத்தினார்.