முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக விவசாயிகளின் மேம்பாட்டுக்காக, இலவச மின்சாரம் வழங்கிவரும் நிலையில், மத்தியஅரசே முன்வந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தல்
Aug 1 2014 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமிழக விவசாயிகளின் மேம்பாட்டுக்காக, இலவச மின்சாரம் வழங்கிவரும் நிலையில், மத்தியஅரசே முன்வந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
மக்களவையில் இன்று, நாடாளுமன்ற அ.இ.அ.தி.மு.க. குழு தலைவர் டாக்டர் மு. தம்பிதுரை பேசும்போது, தமிழகத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கடும் நிதிச்சுமையை ஏற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கி வருவதைச் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், மத்திய அரசே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதேபோல, மாநிலங்களவையில் பேசிய நாடாளுமன்ற அ.இ.அ.தி.மு.க. குழு துணைத்தலைவர் டாக்டர் வா. மைத்ரேயன், மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசு, நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ இந்தியை திணிக்க முயற்சிக்கூடாது என்றும் எச்சரித்தார்.