ஜம்மு - காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளின் மறைவிடத்தை சுற்றி வளைத்தது ராணுவம் - பயங்கர துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் பலி

Sep 2 2014 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்புப்படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில், தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களது தாக்குதல்களை முறியடிக்கும் வகையில், ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தில் ஹன்ஜான் என்ற இடத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, அந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்களது தாக்குதலை முறியடிக்கும் வகையில், ராணுவத்தினர் திருப்பிச் சுட்டனர். இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனிடையே, நேபாளில் இந்த வார இறுதியில் நடைபெறும் சார்க் மாநாட்டின்போது, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் திரு. நிசார் அலிகானை, இந்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் சந்தித்து பேசும் திட்டமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00