குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ராவில் உள்ள ரசாயனம் மற்றும் துணிக் கிடங்குகளில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

Apr 23 2014 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ர மாநிலங்களில் உள்ள ரசாயனம் மற்றும் துணிக் கிடங்குகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்துகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

மேற்கு குஜராத்தின் வாபி என்ற இடத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலைக் கிடங்கில் நேற்றிரவு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து சென்று கொழுந்துவிட்டு எரிந்த தீயை பலமணி நேரம் போராடி அணைத்தனர்.

இதேபோல், மஹாராஷ்ட்ர மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டி நகரில் உள்ள துணி தொழிற்சாலைக் கிடங்கிலும் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு, தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துகளில் பல லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துகள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00