நன்கொடை மற்றும் செலவு கணக்கு விவரங்களை குறித்த காலத்திற்குள் அளிக்காத அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வருமானவரி சலுகையை ரத்து செய்ய வேண்டும் - மத்திய நேரடி வரிகள் ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்
Apr 17 2014 12:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நன்கொடை மற்றும் செலவு கணக்கு விவரங்களை, குறித்த காலத்திற்குள் அளிக்காத அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வருமானவரி சலுகையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய நேரடி வரிகள் ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சிகள், தனி நபர்கள், நிறுவனங்களிடமிருந்து பெறும் நன்கொடை, நிதி பற்றிய விவரங்களை ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். நன்கொடைத் தொகை 20 ஆயிரத்திற்கு மேல் இருந்தால், அதுபற்றிய விவரத்தையும், செலவு கணக்கையும் கடந்த செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், சில கட்சிகள் இத்தகவலை அளிக்க கால தாமதம் செய்துள்ளன. இந்நிலையில், தேர்தல் ஆணையம், மத்திய நேரடி வரி ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், 12க்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள் நன்கொடை உட்பட செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றும், அக்கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வருமான வரி சலுகையை ரத்து செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில், மத்திய நேரடி வரிகள் ஆணையம், செலவு கணக்கை தாக்கல் செய்யாத கட்சிகளுக்கு சம்மன் அனுப்பவுள்ளது.