அணு ஆயுதங்களை ஏந்தி, ஆயிரம் கிலோ மீட்டர்வரை பாய்ந்து இலக்கை தாக்கும் தனுஷ் ஏவுகணை - ஒடிசா மாநிலத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை
Nov 23 2013 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆயிரம் கிலோ மீட்டர் வரை பாய்ந்துசென்று கடல் இலக்கை தாக்கவல்ல தனுஷ் ஏவுகணை, இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
ஒடிசா மாநிலம் சந்திப்பூர் அருகேயுள்ள பலாசூர் கடலோரப் பகுதியில் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து இன்றுகாலை சுமார் 11 மணி அளவில் இந்த ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பால் கடற்படையின் பயன்பாட்டிற்கு என இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டது. 500 முதல் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து செல்லக்கூடிய இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை ஏந்திச்செல்லும் திறன்கொண்டது.