சார்க் மாநாட்டின் போது பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை - மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
Sep 2 2014 11:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேபாளில் இந்த வார இறுதியில் நடைபெறும் சார்க் மாநாட்டின்போது, பாகிஸ்தான் அமைச்சரை, இந்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் சந்தித்து பேசும் திட்டமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜம்முகாஷ்மீர் எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் படையினர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளுடன், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை கண்டித்து பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளது. இந்நிலையில், நேபாளில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில், கலந்து கொள்ள செல்லும், இந்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் திரு. நிசார் அலிகானை சந்தித்து பேசப்போவதில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.