புராதன பெருமைமிக்க நாளந்தா பல்கலைக் கழகம் சீரமைக்கப்பட்டு, சர்வதேச பல்கலைக் கழகமாக தொடங்கிவைக்கப்பட்டது
Sep 20 2014 11:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புராதன பெருமைமிக்க நாளந்தா பல்கலைக் கழகம் சீரமைக்கப்பட்டு, சர்வதேச பல்கலைக் கழகமாக தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
பீஹார் மாநிலத்தில் நாளந்தா என்ற இடைத்தில் அமைந்திருந்த புராதன பல்கலைக் கழகத்தில் ஆசிய நாடுகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. காலவெள்ளத்தில் இப்பல்கலைக் கழகம் சிதைந்துபோய், அதன் அடையாளங்கள் வரலாற்று தடயங்களாக மாறிவிட்டன. இந்நிலையில், இப்பல்கலைக் கழகத்தை புதுப்பித்து, சர்வதேச பல்கலைக் கழகமாக மாற்றுவது என மத்திய அரசு முடிவெடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன்படி, பல்கலைக் கழகம் புதுப்பிக்கப்பட்டு புதிய கட்டடத்தை வெளியுறவு அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளந்தா பல்கலைக் கழகத்தை மேம்படுத்த, அடுத்த 10 ஆண்டுகளில் 2,700 கோடி ரூபாய் செலவிடப்படும் என தெரிவித்தார்.