பீஹாரில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 5 பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்த பரிதாபம் - 20-க்கும் மேற்பட்டோர் காயம்

Jul 29 2014 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

பீஹார் மாநிலம் அவுரங்காபாத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது, கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 5 பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஜார்க்கண்ட்டில் உள்ள தேவ்கர் என்ற இடத்தில் நடைபெற்ற ஆலய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, பக்தர்கள் பலர் பேருந்தில் தங்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில், அவுரங்காபாத் நகரையொட்டிய பகுதியில் சாலையோரம் பேருந்தை நிறுத்திவிட்டு அதன் அருகே அவர்கள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை அந்த சாலை வழியாக சென்ற கண்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டினை இழந்து பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் 5 பெண்கள் உட்பட 12 பேர் பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, காயமடைந்தவர்கள் மீட்டு சதார் மற்றும் கயா பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00