அசாம் மாநிலம் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் காசிரங்கா வன உயிரின பூங்காவில் வெள்ளம் - பல விலங்குகள் உயிரிழந்ததாக தகவல்
Aug 27 2014 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அம்மாநிலத்தில் உள்ள காசிரங்கா வன உயிரின பூங்காவில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், பூங்காவில் உள்ள மான் உள்ளிட்ட விலங்குகள் உயிரிழந்துள்ளன.
அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா பூங்காவில் காண்டா மிருகம், யானை, நீர்யானை, மான்கள் போன்ற ஏராளமான விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரம்மபுத்திரா நதியில் பெருக்கெடுத்துள்ள வெள்ளம், புகுந்ததையடுத்து பூங்கா முழுவதையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதில், யானை போன்ற பெரிய மிருகங்கள் உயிர்தப்பிய போதிலும், மான் போன்றவை நீரில் மூழ்கி உயிரிழந்தன. காண்டா மிருகம் போன்ற விலங்குகள் மேடானப் பகுதியை நோக்கி செல்வதால், அவற்றை வேட்டையாடாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. காசிரங்கா பூங்காவில் கடந்த 2012-ம் ஆண்டு வெள்ளம் புகுந்தபோது, நூற்றுக்கணக்கான விலங்குகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.