ஆந்திராவில், பள்ளி ஒன்றில் பார்வை குறைபாடு கொண்ட 3 சிறுவர்களை, பள்ளி ஆசிரியர் மற்றும் உதவியாளர் கொடூரமாகத் தாக்கிய சம்பவத்தால் சர்ச்சை
Jul 21 2014 6:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திராவில், பள்ளி ஒன்றில் பார்வை குறைபாடு கொண்ட 3 சிறுவர்களை, பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது உதவியாளர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காக்கிநாடாவை அடுத்த திம்மபுராம் பகுதியில் இயங்கி வரும் பார்வையற்றோர் பள்ளியில், 10 வயதிற்குட்பட்ட 3 மாணவர்கள் மீது, அப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் கொடூரமான முறையில், பிரம்பால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் கே.வி., அவரது உதவியாளர் ஆகியோர் சிறுவர்களை மனிதநேயமற்ற முறையில் கொடூரமாக தாக்கியதோடு, தரையில் மோதவும் செய்துள்ளனர். வலிதாங்க முடியாமல் சிறுவர்கள் கதறிதுடிக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. தகவலறிந்த பெற்றோர்கள் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டு, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து, ஆசிரியர் கே.வி.ராவ் மற்றும் அவரது உதவியாளரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.