சிறை செல்வதற்கு முந்தைய நாள் இரவு சஞ்சீர் படத்திற்கு டப் செய்த சஞ்சய் தத் : தொலைபேசியில் டப்பிங் செய்து கொடுத்ததாக இயக்குநர் அபூர்வா நெகிழ்ச்சி
May 31 2023 6:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிறைக்குச் செல்வதற்கு முந்தைய நாள் இரவு சஞ்சீர் படத்திற்காக சஞ்சய்தத் தொலைபேசியில் டப்பிங் செய்தார்? என்று இயக்குநர் அபூர்வா லக்கியா தெரிவித்துள்ளார். சஞ்சய் தத் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள இயக்குநர் அபூர்வா, 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக சஞ்சய் தத் 2013ம் ஆண்டு சிறைக்கு செல்ல நேரிட்டதை சுட்டிக்காட்டினார். அப்போது பிரியங்கா சோப்ரா மற்றும் ராம் சரண் ஆகியோருடன் சஞ்சீர் என்ற படத்தில் சஞ்சய் தத் நடித்துக் கொண்டிருந்ததாகவும், படப்பிடிப்பு முடிந்தநிலையில், டப்பிங் மட்டுமே எஞ்சியிருந்தபோது தன்னை அழைத்து சிறைக்கு செல்வதற்கு ஒருநாள் முன்பு தொலைபேசியில் டப் செய்து கொடுத்ததாகவும் அபூர்வா கூறியுள்ளார்.