பிருத்திவிராஜ் - நயன்தாரா நடிப்பில் உருவான கோல்டு திரைப்படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்
Nov 23 2022 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிருத்திவிராஜ் - நயன்தாரா நடிப்பில் உருவான கோல்டு திரைப்படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாக உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பிரேமம்' வெற்றிக்குப் பிறகு பல வருடங்களாக அடுத்தப் படத்துக்கான பணிகளை மேற்கொண்டு வந்த அல்போன்ஸ் புத்திரன், சுமார் 7 ஆண்டுகள் கழித்து இயக்கிய படமாக 'கோல்டு' திரைப்படம் உருவாகி உள்ளது. பிருத்திவிராஜ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். பிரேமம் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். தற்போது கோல்டு திரைப்படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.