30 ஆயிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை - சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து, 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனை
Aug 26 2019 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்து, 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அண்மைக்காலமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி, 30 ஆயிரம் ரூபாயை நெருங்கி வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை இன்று, ஒரே நாளில் சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் சவரன் 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 38 ரூபாய் அதிகரித்து, மூவாயிரத்து 718 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி, கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் 50 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 900 ரூபாய் அதிகரித்து, 50 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.