முதலமைச்சர் ஜெயலலிதாவை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி திருநெல்வேலி மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புவனேஸ்வரி மற்றும் பல்வேறு நகராட்சிகளின் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் சந்திப்பு
Sep 12 2014 3:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி திருநெல்வேலி மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி E. புவனேஸ்வரி மற்றும் குன்னூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகளின் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி திருநெல்வேலி மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி. E. புவனேஸ்வரி, நீலகிரி மாவட்ட குன்னூர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. டி. சரவணகுமார் புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. ஆர். ராஜசேகரன், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. எம். ஸ்ரீதர், திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி. வி. எம். ராஜலெட்சுமி, ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் பேரூராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. எம். குமணன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.