அன்னையர் தினத்தன்று நிமிடத்திற்கு 150 கேக்குகள் ஆர்டர் செய்த பிள்ளைகள் : அம்மாக்கள் மீதான அன்பிற்கு ஆதாரம் என Zomato நிறுவனம் பதிவு
May 18 2023 2:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அன்னையர் தினத்தன்று நிமிடத்திற்கு 150 கேக்குகள் ஆர்டர் செய்யப்பட்டதாக Zomato நிறுவனம் தெரிவித்துள்ளது. மகிழ்ச்சியான தருணங்களை கேக் வெட்டி கொண்டாடுவதை மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் அன்னையர் தினமான மே 14 அன்று ஏராளமான பிள்ளைகள் தங்களை தாயை மகிழ்விக்க கேக்குகளை ஆன்லைனில் ஆர்டர் செய்ததாக Zomato நிறுவன சிஇஓ தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். அம்மாக்கள் மீதான அன்பு எல்லாவற்றையும் விட அதிகமாக உள்ளதற்கு ஆதாரமாக ஒவ்வொரு நிமிடமும் 150 கேக்குகள் ஆர்டர் செய்யப்பட்டதை குறிப்பிட்டு அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.